Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th December 2018 10:09:45 Hours

விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்

விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விஜயபாகு போயகன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியானது விளையாட்டு வீரர்களது திறமைகளை ஊக்குவிப்பதன் நிமித்தம் விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. அவற்றினுல் 12 குழுக்கள் இப் போட்டிகளில் பங்கு பற்றியதுடன் 20 ஆவது தொண்டர் விஜயபாகு காலாட் படையணியும் இப் போட்டியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் 20 ஆவது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணி திறமையாக விளையாடி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டது. போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரனாக போர் வீரன் டீ.எம்.எஸ்.சி குமாரவும் சிறந்த பந்து வீச்சாளராக லான்ஸ் கோப்ரல் எஸ்.எஸ்.சி ஜயரத்னவும் சிறப்பு அணித் தலைவராக கெப்டன் கே.ஏ.டீ.டி கொத்தலாவல அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பிரதி பதவி நிலை பிரதானி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். Sports Shoes | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp