Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2018 08:25:36 Hours

2018 இலங்கை கைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய இராணுவ வீர வீராங்கணைகள்

2018ஆம் ஆண்டிற்கான இலங்கை கைப்பந்தாட்டப் போட்டிகள் பனாகொடை உள்ளக அரங்கில் கடந்த சனிக் கிழமை (08) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேநானாயக்க அவர்களின் தலைமையில் இரு பாலாருக்குமான கைப்பந்தாட்ட போட்டிகள் இடம் பெற்றது. இதன் போது சிறந்த வெற்றியை இராணுவ வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதன் போது இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்களை பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் வரவேற்றார். மேலும் இவ் 2018ஆம் ஆண்டிற்கான இலங்கை கைப்பந்தாட்டப் போட்டிகள் டிசெம்பர் 4-8 திகதிகளில் இடம் பெற்றது இதன் போது நாடளாவிய ரீதியில் காணப்பட்ட 23 ஆண்கள் உள்ளடங்கிய குழுவினர் மற்றும் 05 பெண் வீராங்கனைகள் போன்றோர் கலந்து கொண்டு இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக வெற்றியீட்டினர்.

அந்த வகையில் இராணுவ ஆண் விiயாட்டு குழுவினர் கடற் படையினருடன் போட்டியிட்டு 42-35 என்ற வீதத்தில் வெற்றியீட்டினர்.

அந்த வகையில் பெண்களுக்கான போட்டியில் இராணுவ மகளிர்ப் படையினர் விமானப் படையினருடன் போட்டியிட்டு இராணுவ மகளிர் படையணினர் 25-14 என்ற வீதத்தில் வெற்றியீட்டினர்.

இந் நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் விளையாட்டு பணிப்பகத்தின் மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க இலங்கை ஒலிப்பிக் சங்கத்தின் தலைவரான திரு சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் பல உயர் பிரமுகர்கள் போன்றோர் இவ் 2018 இலங்கை கைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டனர். jordan release date | GOLF NIKE SHOES