Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2018 10:34:43 Hours

யாழ் பாதுகாப்பு படையினரின் தீபாவளிப் பண்டிகை நிகழ்வுகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இந்து மத தீபாவளிப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு யாழ் கோட்டை மற்றும் கோவிலில் பரிசுப் பொதிகள் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதோது உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாற்சோறு பல திண்பண்டங்கள் போன்றன வழங்கப்பட்டதுடன் வழிபாட்டு ஸ்தலங்களை சுத்திகரிக்கும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது நன்கொடையை வழங்கி வைத்த கண் வைத்தியரும் சிறுநீரக நோய்தடுப்பின் ஆலோசகருமான வைத்தியர் கிரிஷான் ராஜசுந்தரம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் புதிய 100 உடைகள் போன்றன குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பத்தினரு;ககு வழங்கப்பட்டது.

அத்துடன் வடமராச்சியில் குறைந்த வருமானத்தைப் பெறும் 200 பொது மக்களிற்கு உலர் உணவூப் பொருட்கள் மற்றும் புதிய ஆடைகள் போன்றன வழங்கப்பட்டதோடு இதற்கான ஒழுங்குகள் 551ஆவது யாழ் படைப் பிரிவினரால் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் வழிகாட்டலின் இப் படைப் பிரிவினரால் யாழ் கோட்டையில் 1200ற்கு மேற்பட்ட மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டதோடு காங்கேசன்துறையில் இசை நிகழ்வுகள் மற்றும் பலவாறான அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள் போன்றனவூம் காணப்பட்டன.

அத்துடன் படையினர் சாவகச்சேரி வீரபத்திரர் கோவில் வளாகத்தை மற்றும் கோயில் வீதி போன்றவற்றை சுத்தப்படுத்தியதோடு ஆயிரக்கணக்கான மிள்விளக்குள் அலங்கரிக்கப்பட்டு படையினரின் பங்களிப்போடு இக் கோவிலில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது.

மேலும் படையினர் செவ்வாய்க் கிழமை (06) காலை வேளை காங்கேசன்துறையில் உள்ள பொது மக்களி;ற்கு பாற்சோறு வழங்கியதுடன் மற்றும் தீபாவளி தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வீடியோவையூம் காண்பித்தனர். அதே போன்று மாலை வேளை காங்கேசன்துறை கடற்கரையோரத்தில் மாபெரும் இன்னிசை இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

மேலும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் அழைப்பை ஏற்று யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியான மீகஹா ஜதுர ஸ்ரீ விமலதேரர் அவர்கள் மற்றும் யாழ் ஆண்டகையான அருட்தந்தை டெரன்ஸ் அகில இந்து சங்கத்தின் தலைவரான திரு மேகனதாஸ் போன்ற குருமார்கள் மற்றும் பொதுமக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அத்துடன் வடமராச்சிப் பிரதேசத்தில் 200 உலர் உணவூப் பொருட்கள் மற்றும் உடைகள் போன்றன யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகமேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் வடமராச்சி வடக்கின் பிரதேச செயலாளரான திரு ஆல்வார் பிள்ளை ஸ்ரீ மற்றும் வடமராச்சி தெற்;கின் பிரதேச செயலாளரான திரு சார்ல்ஸ் லாசரஸ் வலய கல்வி திணைக்களத்தின் மும்மொழி ஒருங்கிணைப்பாளர் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர். Running Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1