06th November 2018 12:07:31 Hours
நாட்டில் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்ட மழையின் நிமித்தம் பண்டாரவெல – பதுளை புகையிரத பாதைகள் ஸ்தம்பிதமாகியிருந்தது. பின்னர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் இந்த புகையிரத பாதைகளில் ஏற்பட்டிருந்த தடைகள் அகற்றப்படும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 17 படையினரது பங்களிப்புடன் இந்த தடை அகற்றும் சிரமதான பணிகள் (6) ஆம் திகது கினிகம புகையிரத நிலையத்திலிருந்து பண்டாரவெல பிரதேச செயலகத்தின் பிரிவில் இடம்பெற்றது.
இரண்டு மணி நேரத்தினுள் படையினர் மற்றும் புகையிரத ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் முடிவுற்றது. Asics footwear | Marki