Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2018 13:52:59 Hours

யாழ் படையினரால் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் மேற் கொள்ளப்படும் சமூக திட்டங்களை விரிவுபடுத்துவதன் நோக்கத்தில் யாழ் மாணவர்களை ஊக்கு விக்கும் நிமித்தம் இம் மாணவர்களுக்கு சைக்கில் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (23) ஆம் திகதி செவ்வாய் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

இந் திட்டமானது பாடசாலை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம சேவகர் அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்;பட்டதற்கமைய யாழ் வயவிலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இருந்து வருகை தந்த 13 மாணவர்களில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் 20 மாணவர்கள் தரநிலை 5 தேர்ச்சி பெற்று 164 மதிப்பெண்களில் பெற்றவர்களுக்கு இந் நன் கொடைகள் வழங்கப்பட்டன.

இந்த நன்கொடை மற்றும் நிதியுதவி யாழ் பாதுகாப்புத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு யாழ்ப் பிராந்தியத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும்; இராணுவப் படையினரும் கலந்து கொண்டனர். Authentic Sneakers | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite