Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2018 11:51:29 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதி பதவியேற்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவான் டி சில்வா அவர்கள் (25) ஆம் திகதி வியாழக்கிழமை தியதலாவ இராணுவ படைத் தலைமையக அலுவலகத்தில் தனது பதவி பொறுப்பேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த இப் புதிய தளபதி அவர்களுக்கு படையினரால் நுழைவாயிற் பாதுகாப்பு மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பௌத்த மத ஆசிர்வாதத்துடன் இராணுவ சம்பிரதாய முறைப்படி தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இப் படைத் தளபதி அவர்களால் இப் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றது.

இப் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் டி சில்வா அவர்கள் இப் படைத் தலைமையகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அனைத்து படையினர்களிடமும் தமது பணியின் முன்நேற்றம் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை பற்றியும் உறையாற்றினார். அத்துடன் குழு புகைப் படத்திலும் கலந்த கொண்ட அவர் அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்த கொண்டார். மேஜர் ஜெனரல் ருவான் டி சில்வா அவர்கள் இப் படைத் தலைமையகத்தில் பதவியேற்கும் முன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனுராதபுரம் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 21 ஆவது படைப் பிரிவில் கட்டளை தளபதியாக கடமையில் இருந்தவர் ஆவார்.

மேலும் இவர், 11ஆவது மற்றும் 12 ஆவது படைத் தலைமையங்களில் தளபதியாகவும் 111ஆவது படைப் பரிவு, 112ஆவது படைப் பரிவு, 121ஆவது படைப் பிரிவுகளில் கட்டளை தளபதியாக கடமையாற்றியுள்ளார். affiliate link trace | Air Jordan Release Dates 2020