Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2018 14:03:51 Hours

வன்னி படையினரின் ஒத்துழைப்புடன் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்​டேஷன் அமைப்பின் அனுசரனையுடன் மஹாகச்சிகொடிய பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிடம் (20) ஆம் திகதி சனிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது அழைப்பையேற்று இந்த கட்டிட திறப்பு விழாவிற்குஹேமாஸ் அவுட்ரீச் பவுன்​டேஷன் அமைப்பின் பிரதானியான திரு என்சிலேம் சுனில் மல்வான மற்றும் திருமதி எதெல் டயான சிசிலியா மல்வான அவர்கள் வருகை தந்து இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 563 ஆவது படைத் தலைமையகத்தின்படைத் தளபதி கேர்ணல் ஈ.ஏ.டீ.பி எதிரிசிங்க அவர்களது தலைமையில் 7 ஆவது சிங்கப் படையணியின் கட்டிட நிர்மான பணியாளர்களின் ஒத்துழைப்பு பணிகளுடன் இந்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டிட நிர்மானி பணிகளுக்காக 2.3 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, பிரதேசசபை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sport media | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C