23rd October 2018 15:14:29 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பௌத்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் வன்னி போதிதஹக்சினாரமய விகாரையில் (19) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
சியம்பலகஸ்வெவ ஆனந்தபித்தான தேரர் அவர்களினால் இந்த ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன. இந்த ஆசிர்வாத பூஜைகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்கேற்புடன் இடம்பெற்றது.
மேலும் இந்த ஆசிர்வாத பூஜைகளில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலாள், 563, 611 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். Best Authentic Sneakers | UK Trainer News & Releases