22nd October 2018 16:01:22 Hours
கலாஓயாவில் அமைந்துள்ள இராணுவ தொழிற் பயிற்சி மையத்தினால் ராஜாங்கனைய பிரதேச சபையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க ஐந்து சிறார்களை கொண்ட வறிய குடும்பத்திற்கான வீட்டு நிர்மானப்பனிக்கான உதவிகளை படையினர் வழங்கி வைத்துள்ளனர்.
இதன் போது ராஜாங்கனைய பிரதேச சபையால் சீமேந்து மற்றும் பல நிர்மானப் பொருட்களுக்கான நன்கொடையை வழங்கியிருந்ததுடன் இராணுவத்தின் இராணுவ தொழிற் பயிற்சி மையமானது இவ் வீட்டுத் திட்டத்தை பொறுப்பேற்ற இனிதே கட்டுமானப் பணிகளை நிறைவூ படுத்தியது.
கடந்த வெள்ளிக் கிழமை (19) இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் ராஜாங்கனைய பிரதேச சபையின் தலைவர் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் டீ எஸ் பெரேரா மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் நிறைவேற்று அதிகாரியான மேஜர் யூ எல் என் டீ கே லியனகே மற்றும் இலங்கை பீரங்கிப் படையனியின் அதிகாரியான மேஜர் வி ஜே பி ஜெ விகேலியேகெதர போன்றௌர் கலந்து கொண்டதுடன் இப் புதிய வீடானது அனுகமுவ துலன பிரதேசத்தைச் சேர்ந்த திரு டீ ஜி புஷ்பகுமார போன்ற குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது. url clone | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ