Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2018 14:14:37 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் புதிய வீடுகள் நிர்மானித்து வழங்கல்

இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் தலைமையில் அங்கவீனமுற்ற இரு பிள்ளைகளின் தந்தைக்கு புதிய வீடொன்று பொன்டெரா பிரான்ட் கெம்பனியின் நன்கொடையால் நிர்மானித்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெலிமட நுகதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த இவ் அங்கவீனமுற்ற திரு கருணாதாஸ எனும் நபர் வீதி விபத்தின் போது பலத்த காயங்களுக்குற்பட்டு அங்கவீனமுற்றார். மேலும் இரு பிள்ளைகளின் தந்தையான இவர் சுய வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு சிரமப்பட்டதுடன் இவை தொடர்பான விடயத்தை குறிப்பிட்ட கடிதத்தை இராணுவத் தளபதியவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதற்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் நன்கொடையாளர்களின் உதவியோடு 09ஆம் திகதி யூலை மாதம் 2018ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பணிகள் கிட்டத் தட்ட மூன்று மாத காலத்தில் இனிதே நிறைவடைந்தன

மேலும் கடந்த வெள்ளிக் கிழமை (19) மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் தலைமையில் நன்கொடையாளர்களின் பங்களிப்போடு இவ்வீடானது இந் நபருக்கு வழங்கப்பட்டது.

மேலும் திரு கருணாதாஸ அவர்களின் இரு பிள்ளைகளுக்கும் உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்கள் கிராம ஒருங்கிணைப்பாளர்களால் வழங்கப்பட்டதுடன் இதன் போது இவர் தமது உள்ளம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்தார். trace affiliate link | Trending