Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2018 13:58:28 Hours

அகுரேகொடவில் முன்னெடுக்கப்படும் கட்டட வேலைப்பாடுகளை பார்வையிட்ட இராணுவ தளபதி

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (30) அன்று காலை வேளை அகுரேகொடவில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கட்டட வேலைப்பாடுகளை பார்வையிடச் சென்றிருந்தார்.

இதன் போது வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை பாதுகாப்பு படைத் தலைமையக திட்டத்தின் பணிப்பாளரான ஏயார் வைஸ் மார்சல் ரொஷான் பதிரகே அவர்கள் வரவேற்றார். இதன் போது தளபதியவர்கள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ வி ருபசிங்க திட்டமிடல் நிர்வாகியான பிரிகேடியர் ரஞ்சித் பெரமுனகே கட்டட திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரான கேர்ணல் பிரசாந்த விமலசிறி மற்றும் முப் படையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து இக் கட்டட வேலைப்பாட்டை பார்வையிடச் சென்றார்.

இதன் போது இக் கட்டட நிர்மானம் தொடர்பான விளக்கங்களை அதிகாரிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்கள் இக் கட்டட நிர்மானம் தொடர்பான விளக்கங்களையும் தமது கருத்தையும் இவ் அதிகாரிகளிடம் விபரித்தார். latest Nike Sneakers | nike fashion