25th September 2018 17:06:36 Hours
பொலன்னவை மாதுறுஓயாவில் அமைந்துள்ள தம்மின்ன முகாமில் அமைந்துள்ள 6ஆவது கெமுனு ஹேவா படையணியில் அமையப்பெற்ற மரணித்த படைவீரர்களுக்கான நினைவுத் துாபியை திறந்து வைக்கும் முகமாக இப் படைத் தலைமையக கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜெ எம் டீ என் சி ஜயமஹா அவர்களின் அழைப்பை ஏற்று மின்னேரிய காலாட் படையணி பயிற்றுவிப்பு பாடசாலையின் தளபதியான மேஜர் ஜெனரல் டீ எஸ் பன்சஜயா அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் 6ஆவது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட பிரதம அதிதியவர்கள் யூத்தத்தின் போது போரிட்டு மரணித்த கெமுனு ஹேவா படையினரை நினைவூ கூறும் நோக்கில் அமையப்பெற்ற இந் நினைவுத் துாபியைத் திறந்து வைத்துள்ளார். மேலும் இந் நினைவுத் துாபிக்கு உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் தமது நினைவஞ்சலியை செலுத்தினர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். buy shoes | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov