Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2018 22:17:00 Hours

இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகள் – 2018

இலங்கை இராணுவ பரா மெய்வல்லுனர் 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் 700 அவயங்களை இழந்த இராணுவத்தினரது பங்களிப்புடன் (19) ஆம் திகதி காலை ஹோமாகமையில் உள்ள தியகம விளையாட்டு அரங்கில் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் வருகை தந்தார். இவரை பரா மெய்வல்லுனர் சங்கத்தின் பிரதி தலைவர் மேஜர் ஜெனரல் ரஜீவ் விக்ரமசிங்க அவர்கள் வரவேற்றார்.

பரா மெய்வல்லுனர் போட்டிகளில் கூடைப் பந்தாட்டம், பெட்மின்டன், சைக்கிளோட்டம், சக்கர நாற்காலி, மரதன், வில் ஏய்தல், கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம், மேசைப் பந்தாட்டம், கிரிக்கட், நீச்சல், சக்கர நாற்காலி, துப்பாக்கிச் சுட்டுப் போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டிகள் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெற்றன. பரா மெய்வல்லுனர் போட்டிகள் 1991 ஆம் ஆண்டு இராணுவ அங்கவீனமுற்ற படையினர் போட்டிகள் என அறிமுகப்படுத்தி 2010 ஆண்டு இலங்கை இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டியாக பெயர் மாற்றப்பட்டன.

இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பரா விளையாட்டு சங்கத்தின் செயலாளர், டயலொக் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Adidas footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp