Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2018 13:46:44 Hours

சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்

தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டனர்.

இந்த செயலமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பணிமனையில் முப்படையினரது பங்களிப்புடன் (5) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன. இதில் முப்படை மற்றும் பொலிஸார் 120 பேர் கலந்து கொண்டனர்.

செயலமர்வுகளில் சுனாமி அனர்த்தங்களுக்கு எவ்வாறு முகமளிப்பது தொடர்பான விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி திட்டங்கள் அம்பாறை, காலி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் 59, 681 ஆவது படைத் தளபதிகள் பங்கேற்று கொண்டனர். Nike air jordan Sneakers | Nike for Men