Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2018 11:26:13 Hours

இராணுவ மகளீர் படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம் முதன்னாயக அவர்கள் நியமிப்பு

இலங்கை இராணுவ மகளீர் படையணியின் 16 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம் முதன்னாயக அவர்கள் ஓகஸ்ட் 27 ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பதாக இருந்த மேஜர் ஜெனரல் டீ எஸ் வீரமன் அவர்கள் ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஓய்வுற்றதையிட்டு இந்த புதிய தளபதி நியமிக்கப்பட்டார்.

இராணுவ மகளீர் படையணிக்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை இராணுவ மகளீர் படையணியின் பிரதிக் கட்டளை தளபதி பிரிகேடியர் அதுல டீ சில்வா அவர்கள் வரவேற்றார். பின்னர் மகளீர் படை வீராங்கனைகளால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் படைத் தளபதிக்கு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் இராணுவ மகளீர் படை வீராங்கனைகளுக்கு உரை நிகழ்த்தப்பட்டன. பின்னர் சமய சம்பிரதாய ஆசிர்வாத பூஜைகளின் பின் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

அத்துடன் இராணுவ மகளீர் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டு இராணுவ வீராங்கனைகளுடன் உரையாடலையும் மேற்கொண்டார். மேஜர் ஜெனரல் எம் முதனாயக அவர்கள் இந்த பதவியை ஏற்பதற்கு முன்னர் கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பிரதேச தளபதியாக கடமை வகித்துள்ளார். Nike Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD