Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிளுக்கு இடையிலான கரம் போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான கரம் போட்டிகள் ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிங்கப் படையணி மற்றும் விஜயபாகு காலாட் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. அதன்போது விஜயபாகு காலாட்படையணி திறமையாக விளையாடி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

அதனைப் போல் 6 ஆவது இராணுவ மகளீர் படையணி மற்றும் 3 (தொ) மகளீர் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் 3 (தொ) மகளீர் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த கரம் போட்டி இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தலைமையகத்தின் இராணுவ பொது பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன அவர்கள் வருகை தந்து நிகழ்வினை சிறப்பித்தார்.

மேலும் இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாரச்சி, இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் லயனல் கஸ்தூரியாரச்சி அவர்கள் இணைந்து கொண்டனர்.

கரம் போட்டியில் பங்கு பற்றிவெற்றி பெற்ற வெற்றியாளர்களின் பெயர்கள் கீழ்வருமாறு

ஆண் பிரிவு

போர் விரத் என்.எம்.ஏ அஹ்மட் (இசப)

பெண்கள் பிரிவு

போர் வீராங்கனை ஆர். டீ ஹப்ரியால் (இமப)

சிறந்த விளையாட்டு வீரர்

லான்ஸ் கோப்ரல் ஈ.எம் பாலசூரிய (இதேபாப) Mysneakers | nike air max 95 obsidian university blue book list