Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2018 14:12:00 Hours

சிங்கப் படையணி படையினரின் பாதுகாப்புடன் ‘நெடுங்கமுவ ராஜா’ யானை கண்டிக்கு வருகை

ஶ்ரீ தலதா மாளிகை பெரஹரவில் பங்கேற்பதற்காக ‘நெடுங்கமுவ ராஜா’ யானை 2, 8 ஆவது சிங்கப் படையணியின் பாதுகாப்புடன் கண்டி நகரத்திற்கு (20) ஆம் திகதி திங்கட் கிழமை வருகை தந்தது.

கண்டி புனித வளாகத்தில் வைத்து தலதா மாளிகையின் செயலாளரான ஜயம்பதி வேடகலையிடம் இந்த யானையை இராணுவத்தினர் ஒப்படைத்தனர். ‘நெடுங்கமுவ ராஜா’ யானையானது 12 ஆவது தடவையாக கண்டி பெரஹரவில் புத்தரின் நினைவுச் சின்னங்களை சுமந்து செல்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களின் தலைமையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு இந்த யானைக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த பெரஹர நிறைவின் பின்பு இராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த ‘நெடுங்கமுவ ராஜா’ யானை மீண்டும் திருப்பி அனுப்பபடும் என்று மத்திய பாதுகாப்பு படைத் தளபதி தெரிவித்தார். Adidas footwear | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092