Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2018 12:33:37 Hours

யாழ் பிரதேசத்தில் மற்றுமோர் 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு

இலங்கை இராணுவமானது வடக்கிலுள்ள படையினர் வசமுள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான காங்கேசன்துரை மத்திய துஃ234 கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட 4.2 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வானது கடந்த செவ்வாய்க் கிழமை (21) இப் பிரதேசத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் 4.2 ஏக்கர் காணிகளின் உறுதிப் பத்திரங்களை யாழ் மாவட்ட செயலாளரான திரு என் வேதநாயகம் அவர்களுடன் இணைந்து இம் மக்களுக்கு வழங்கினார்.

அத்துடன் இந் நிகழ்வானது 51ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான செனெவிரத்தின அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் தெல்லிப்பலை மாவட்டச் செயலாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர். latest Running | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ