14th August 2018 21:05:53 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப் பிரிவின் 593ஆவது படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி உள்ளடங்களான இருபது இராணுவப் படையினரால் 83ஆவது கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட செம்மலியில் கடந்த திங்கட் கிழமை (13) ஏற்பட்ட மீன்பிடியினரின் குடில்களுக்கு பரவிய தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் இப் படையினர் தீவிரமாக செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் படையினர் இப் பிரதேசத்திற்கு வரும் முன்னரே 6குடில்கள் தீக்கிரையாகின.
இச் செயற்பாடானது 593ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் லங்கா அமரபால அவர்களின் கண்காணிப்பிலும் ஆலோசனையின் கீழும் நடாத்தப்பட்டது. bridge media | Women's Designer Sneakers - Luxury Shopping