Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2018 16:49:26 Hours

வன்னி படையினரின் ஏற்பாட்டில் ஊனமுற்றவர்களுக்கான செயற்கை கால்கள் வழங்கும் திட்டம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்திலுள்ள மடு, ஈச்சங்குளம் மற்றும் நந்தன்கண்டல் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்புடன் கைகொடுக்கும் நல்லெண்ணத்துடன் 22 செயற்கைக் கால் வகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கிராம சேவர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வேண்டுகோளின் பேரில் அன்றைய தினம் தொட்டு உதவி புரிகின்ற குண்டசாலை செயற்கை உறுப்பு நிலையத்தின் அனுசரனையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன

61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்ன, அவர்களது தலைமையில் 613 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஆர்.கே.என்.சி ஜயவர்தன அவர்களது தலைமையில் குண்டசாலை கைச்சாத்திடப்பட்ட மையத்தின் அனுசரனையில் ஆர்தோடிக்ஸ் பிரசித்திப் பெற்ற வைத்தியர்களான எஸ்.எஸ் அத்தநாயக அவர்களினால் இவர்கள் பரிசீலனை செய்து பின்னர் அவர்களது உறுப்புகள் அளவெடுத்து செயற்கை கால்களை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Running Sneakers Store | NIKE AIR HUARACHE