Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st August 2018 12:00:05 Hours

கிரிக்கெட் அணியினருக்கு இராணுவ தளபதியினால் ஆசிர்வாதம்

BDF விளையாட்டுத் திட்டத்தின் கீழ் T-20 50 ஓவர் போட்டிகளிற்கு இலங்கை பாதுகாப்பு சேவை கிரிக்கெட் அணி பங்கு பற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டிகளுக்காக 8 இராணுவ வீரர்களும், 6 கடற்படை வீரர்களும் பார்படோஸுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக இராணுவ விளையாட்டு கவுன்சில் 'நட்புகள் மூலம் இந்த விளையாட்டுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பார்படோஸில் இடம்பெறவிருக்கும் போட்டிகளுக்கு இராணுவ தளபதிக்கு விடுத்த அழைப்பையேற்று இப்போட்டியாளர்கள் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பி.டி.எப் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை SLDS அணியுடன் இணைந்து விளையாடும் போட்டியாக நிகழ்கின்றது.

இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் இராணுவ தளபதியின் அசிர்வாதத்துடன் பங்கேற்றுக் கொள்வதற்காக தயாரானார்கள் இவர்கள் இராணுவ தளபதி, இராணுவ கிரிக்கட் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பீ.எஸ் விதானகே, ரியர் அத்மிரால் எஸ்.ஏ வீரசிங்க, பிரிகேடியர் டப்ள்யூ.பீ.எஸ்.எம் அபேசேகர, கொமடோர் ஏ.பி.என். டீ சில்வா, கிரிக்கட் அணி தலைவர் லான்ஸ் கோப்ரல் டீ சில்வா உட்பட பாதுகாப்பு சேவை விளையாட்டு வீரர்கள் குழுப் புகைப்படத்தில் இணைந்து கொண்டனர். Best Sneakers | Nike Running