Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd August 2018 17:12:53 Hours

முதல் கட்டமாக முல்லைத்தீவு பிரதேசங்களில் தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்

‘ஹார்திக ரடக்’ எனும் தொனிப் பொருளின் கீழ் வடக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 5000 தென்னங் கன்றுகள் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள பொது மக்களுக்கு (2) ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 14 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கான புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று பிரதேசத்தைச் சேர்ந்த 147 குடும்பத்தினருக்கு இந்த தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலாளர்கள், படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். buy shoes | nike fashion