Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2018 19:01:41 Hours

மட்டக்களப்பில் உலர் உணவு பொருட்கள் இராணுவத்தினரால் விநியோகம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள தமிழ் , முஸ்லீம் மக்களுக்கு 7000 உலர் உணவு பக்கட்டுகள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் (25) ஆம் திகதி புதன் கிழமை வழங்கப்பட்டன.

அண்மையில் இடம்பெற்ற புனித ரமஸான் பெருநாளையிட்டு மட்டக்களப்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பொதுமக்களுக்கு உலர் உணவு பொருட்கள் எம். சி. ஹமீட் ஹஜியார் அவர்களது அனுசரனையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்துசித பனன்வல வருகை தந்தார்.

அவருடன் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக மற்றும் 231 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல அவர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான சமாதான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி 231 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 11 ஆவது சிங்கப் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்டது. Asics footwear | Trending