Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2018 16:00:12 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் தீயனைப்பு

சீரற்ற காலநிலையின் நிமித்தம் நுவரேலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் கடந்த தினங்களில் பரவிய தீ மத்திய பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் அனைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

நுவரேலியா மாவட்டத்தின் வலபன பிரதேச செயலகத்திற்குட்பட்ட மில்லபிடிய பிரதேசத்தில் (21) ஆம் திகதி சனிக் கிழமை ஏற்பட்ட தீயை 3 ஆவது சிங்கப் படையணியினால் அனைக்கப்பட்டு அப்பிரதேசம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த பணிகளில் இராணுவ அதிகாரி உட்பட 20 படை வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் பதுளை மாவட்டத்தின் வெலிமட பிரதேச செயலகத்திற்குரிய உடுககவர பிரதேச்தில் பரவிய தீயை 5 ஆவது (தொ) சிங்கப் படையணியினால் அனைக்கப்பட்டு அப்பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் (22) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

அத்துடன் ஹப்புதலை பிரதேச செயலகத்திற்குட்பட்டபெரகல கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய படையினரால் இப் பிரதேசத்திலும் தீ அனைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. url clone | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ