Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2018 13:50:39 Hours

போர் வீரனான ஹசலக காமினியின் நினைவு தினம் அவரின் சொந்த ஊரில் அனுஷ்டிப்பு

நாட்டிற்காக தம்மை உயிர் தியாகம் செய்த 6 ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் கோப்ரல் ஹசலக காமினி குலரத்ன அவர்கள் ஆனையிறவு அவரது முகாமில் தங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயர்ந்த உயிர் தியாகத்தை செய்தவர், இவரது 27 ஆவது ஆண்டு நினைவு விழா தனது சொந்த ஊரான ஹசலககையில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியில் (16) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.

அதன்படி இந் நினைவு விழாவனது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் பங்களிப்புடன் (14) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வு இராணுவ தளபதி அவர்களின் ஆசீர்வாதத்துடன் மத்திய பாதகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் உத்தரவின் பேரில் ஹசலக நினைவுச் சின்னங்கள் நிர்மாணிக்கப்பட்டு அதன் பின்னர் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

அதன் படி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் படையினர்களின் ஏற்பாட்டுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் கேர்ணல் நிர்வாக கேர்ணல் ரணஹேவா மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் போர் வீரர்களின் தாய், உறவுகள் பெரும்பாலானோர்கள் கலந்து கலந்த கொண்டனர். jordan Sneakers | Sneaker & Lifestyle News