17th July 2018 13:25:09 Hours
நாடெங்கிலும் டெங்கு ஒழிப்பு திட்டத்திட்கு இணையாக 22 ஆவது படைப்பிரிவின் படையினர், திருக்கோணமலை மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதனை அதிகாரிளுடன் இணைந்து திருக்கோணமலை நகரத்திலும் அதன் புறநகர் பகுதியிலும் – ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை இரண்டு நாள் டெங்கு தடுப்புத் திட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த இரண்டு நாள் வேலைத்திட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவ படையினர் இணைந்து தொழில் புரியும் இடங்களில் நல்ல ஆரோக்கியமான பாதுகாப்பு பற்றியும், எவ்வாறு டெங்கு நோயை அகற்ற முடியும் என்பதையும் பொது மக்களுக்கு தெரிவுபடுத்தினர்.
இத் திட்டமானது 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருணஜயசேகர அவர்களின் ஆலோசனைக்கமைய 221 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் சுமித் பிரேமலால் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந் திட்டம் மேற் கொள்ளப்பட்டதுடன், திருக்கோணமலை வைத்திய அதிகாரியான வைத்தியர் எஸ் சியோன்லிபவன், சிரேஷ்ட பொது சுகாதார கண்காணிப்பாளர் திரு.எம்.எம். விமலசிறி மற்றும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட படையினரும் இதில் கலந்து கொண்டனர்.Nike footwear | Nike for Men