Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2018 11:43:15 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரால் இரத்த தான நிகழ்வு

தேசிய ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை மற்றும் உத்தியோகபூர்வ மொழிகள், தேசிய கல்வி மற்றும் பயிற்சி தேசிய நிறுவனம் (NILET) இன் வேண்டுகோளுக்கு இணங்க,மேற்குபாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்இரத்த தான முகாம் பன்னிபிடியவில் உள்ள மகும்பூர் பயிற்சி மையத்தில்(8) ஆம் திகதிவெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினர் 25 பேர் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பீரங்கிப் படையணி, இலேசாயுத காலாட் படையணி, இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் இணைந்திருந்தனர்.

buy footwear | シューズ