24th May 2018 16:55:49 Hours
நாட்டில் இடம்பெறும் சீரற்ற காலநிலையின் நிமித்தம் பாதிப்படைந்துள்ள புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேசவாசி மக்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய இந்த பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் ,14 மற்றும் 143 ஆவது படைப் பிரிவின் தலைமையில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஹாவெவ, இரனவில்ல, உடப்புவ, பத்தாவெவ மற்றும் வலகாபிடிய பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த மக்களுக்கு இராணுவத்தினரால் இந்த உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இராணுவத்தினரால் பாதிப்படைந்த 40 குடும்பத்தினருக்கும் தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தனர்.
best shoes | Air Jordan