Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2018 14:54:24 Hours

21 ஆவது படைப் பிரிவின் ஆண்டு பூர்த்தி விழா

21 ஆவது படைப் பிரிவின் 30 ஆவது ஆண்டு பூர்த்தி விழா அநுராதபுரத்தில் அமைந்துள்ள தலைமையகத்தில் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய இந்தப் படைப் பிரிவினால் ருவன்வெலிசேய வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி ‘போதி பூஜை ‘ நிகழ்வுகளும் இடம்பெற்றன.

படைத் தளபதிக்கு 22 ஆவது கஜபா படையணி இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவித்தனர். அதன் பின்பு தலைமையகத்தில் அனைத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் பகல் விருந்து உபசார நிகழ்வு இடம்பெற்றன.

ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி தர்ம சொற்பொழிவுகளும் , ஆறாம் திகதி இந்த ஆண்டு பூர்த்து விழாவை முன்னிட்டு இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

jordan Sneakers | Nike Off-White