Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளிநொச்சியில் சாதாரண பொது தராதர மாணவ மாணவிகளுக்கு நன்கொடகைள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய நற்குண சான்றிதழ் மன்றம் (குண ஜய சதுட மன்றம்) குசில் குணசேகர அவர்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாண மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக (14) ஆம் திகதி புதன் கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த சைக்கிள்களை நன்கொடையாக வழங்கினார்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் குண நற்சான்றிதழ் மன்றத்தின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நல்லெண்ணம் மற்றும் நல்லினக்க செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

கிளிநொச்சி படைத் தளபதி இறுதியில் இந்த மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் குழுப் புகைப்படத்தில் இணைந்திருந்தார்.

Running sports | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals