Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st May 2018 23:42:10 Hours

இராணுவ உதவியுடன் 'நிலையான வளர்ச்சி' எனும் தலைப்பில் கருத்தரங்கு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையம் , உபகரண மாஸ்டர் ஜெனரல், விவசாய பணியகம், இராணுவ பேண்ட் மற்றும் நாடக கலை பணியகம், பொறியியலாளர் சேவை பணியகங்களின் பங்கேற்புடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் முதலாம் திகதி மாலை ராஜகிரி பொரல்லையில் அமைந்துள்ள ‘ ஶ்ரீ சதாஹம் செவன’ வளாகத்தினுள் மகாநாடு இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேன்மை தங்கிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்து கௌரவ பன்னாட்டு பௌத்த மாநாட்டு அமர்வுகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்விற்கு வெளிநாட்டு நாடுகளிலிருந்து 20 க்கும் மேற்பட்ட பௌத்த பிரதிநிதிகள் வருகை தந்தனர். மேலும் இந்த நிகழ்வில் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்தியர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் உறையை நிகழ்த்தினார்.

கோரிக்கைக்கு அமைய, வென் நிறுவனத்தின் உதவியுடன் மதகுருவான அதுரலிய ரத்ன தேரர் அவர்களின் பங்களிப்புடன் ‘பிவித்துரு ஹெடக்’ இராணுவ திட்டத்தின் கீழ் இயற்கை வளங்கள், மண்டபம் ஏற்பாடுகள், அலங்காரங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றன.

'சீனா-இலங்கை பௌத்த சங்கம்', 'ஷாஷா சேவாண' அறக்கட்டளை, வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் உட்பட பல சர்வதேச பௌத்த அமைப்புகளின் பங்கேற்புடன் கொழும்பில் நான்கு நாட்கள் இந்த மகாநாடுகள் இடம்பெறும்.

அமர்வுகளில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தொடக்க விவகாரங்களுக்கு விசுவாசமாக ஒரு சிறப்பு உறுதிமொழியை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜனாதிபதியும் தொடக்க அமர்வுகளுக்கு பிரதான பங்களிப்பாளராக பங்கேற்றார்.

இந்த நிகழ்விற்கு இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த மகாநாடு எதிர்வரும் வெள்ளிக் கிழமை (04) ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் இராணுவ தலைமையகத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிமல் விதானகே அவர்களது பூரண ஏற்பாடுடன் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளின் போது இராணுவ கலாச்சார குழுவால் கலை அம்சங்கள் முன்வைக்கப்பட்டன..

அமைப்பாளர்களின் அழைப்பின் பேரில் ஒரு புதிய சுகாதார வளாகத்தை கட்டியெழுப்பவும், வளாகத்தை சுற்றி ஒரு புதிய வேலி அமைக்கவும் இந்த மகாநாட்டில் உரைகள் இடம்பெற்றன.

அதேபோல், சதாம் சேவணா வளாகத்தில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் விஷத்தன்மையற்ற பொருட்களிலிருந்து இலவசமாக பயிர்களைக் கொண்ட வேளாண்மை மாதிரி பண்ணையும் அமைக்கப்பட்டிருந்தது.

bridgemedia | Nike