Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2018 15:15:40 Hours

திருகோணமலையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதுவருட நிகழ்வுகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதுவருட நிகழ்வூகள் 22ஆவது படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) பலவாறான விளையாட்டு நிகழ்வுகளுடன் இடம் பெற்றது.

இவ் 2018ஆம் ஆண்டிற்கான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வூகளில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் போன்ற மக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது பனிஸ் உன்னுதல் ரபான் அடித்தல் தலையனை அடித்தல் யானைக்கு கண் வைத்தல் அழகு ராஜா மற்றும் ராணிப் போட்டிகள் உடன் பல கலாச்சார நிகழ்வுகளும்இடம் பெற்றன.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித பனான்வெல 221 மற்றும் 222 படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.

Authentic Sneakers | Men’s shoes