Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2018 16:14:42 Hours

புதிய இராணுவச் செயலாளராக மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க நியமனம்

இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் புதிய இராணுவச் செயலாளராக தமது கடமைப் பொறுப்பை வியாழக் கிழமை (12) ஏற்றார்.

இந் நிகழ்வாது சம்பிரதாயபூர்வமான மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானதுடன் பல உயர் அதிகாரிகளின் மத்தியில் இப் புதிய இராணுவச் செயலாளர் அவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தை இட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

அதன் பின்னர் இவ் அதிகாரியவர்கள் தமது கடமைகளைப் பற்றிய விளக்கத்ததையூம் எண்ணக்கருவையூம் படையினருடன் பகிர்ந்து கொண்டார்.

இவ் அதிகாரியவர்கள் இலங்கை சமிக்ஞைப் படையணியின் பிரதி சமிக்ஞை அதிகாரியாக இராணுவப் படைத் தலைமையகத்தில் சேவையில் இருந்தவிடத்தே இப் பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இப் புதிய இராணுவச் செயலாளர் அவர்கள் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர அவர்களின் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை கோலைக் கல்லுhரியில் ஆரம்பித்ததுடன் இவர் இலங்கை இராணுவத்தில் 1985ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதியன்று 20ஆவது பயிற்றுவிப்பு பிரிவில் தமது ஆரம்ப பயிற்ச்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் 1986ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி இவ் அதிகாரியவர்கள் செக்கன்ட் லெப்டினன்ட் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மேலும் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் தமது 32வருட கால இராணுவச் சேவையில் நம்பகத்தன்மையுடன் பலவாறான உயர் பதவிகளை இலங்கை சமிக்ஞைப் படையணியில் வகித்துள்ளார்.

இந் நிகழ்வில் பலவாறான உயர் அதிகாரிகள் ஸ்டாப் அதிகாரிகள் பணிப்பாளர்கள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

Running Sneakers Store | Nike SB