Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2018 10:41:42 Hours

இராணுவ புலனாய்வு சிறப்பணியின் 25 ஆவது ஆண்டு விழா

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாகவும் இராணுவ புலனாய்வு சிற்ப்பணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி விழா கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் ஜனவாரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இராணுவ குடும்ப அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன்.

இராணுவ புலனாய்வு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் லயனல் பலகல்ல அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆண்டு விழாவை முன்னிட்டு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயமுறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

மேலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிகளுக்கு முன்பாக உயிர் நீத்த படைவீரர்களின் உறவினர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதைகளை செலுத்தினார்கள்.

ஆண்டு விழாவை முன்னிட்டு இராணுவத்தினரது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்விற்கு முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் தயா ரத்னாயக, ஜெனரல் ஜகத் அல்விஸ் மற்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இறுதியில் இராணுவ புலனாய்வு படையணியினரின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

Buy Kicks | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp