Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2017 10:26:33 Hours

இராணுவ மகளிர் படையணியினரின் நினைவாண்டு நிகழ்வு

இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் தமது படையணியின் 20ஆவது நினைவாண்டின் நிகழ்வு சனிக்கிழமை (18) ஆம் திகதி மெதவச்சியில் அமைந்துள்ள 4ஆவது மகளிர் படையணி தலைமையகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தினராக இராணுவ மகளிர் படையணியின் கேர்ணல் நிறைவேற்று அதிகாரியான பிரிகேடியர் தில்ருக்ஷி முனசிங்க அவர்களை இப்படையணியின் படைத் தளபதியவர்களினால் வரவேற்கப்பட்டதோடு,இப்படையணியினரால் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து படைத் தலைமையக வளாகத்தில் பிரதான விருந்தினர் அவர்களினால் தனது பயணத்தின் நினைவாக மரநடுகை நிகழ்வும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து,கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இராணுவ மகளிர் படையினர் 500 பேர்களுக்கும் மத்தியில் பிரதான விருந்தினராக கலந்து கொண்ட பிரிகேடியர் தில்ருக்ஷி முனசிங்க அவர்களினால் உறையும் ஆற்றப்பட்டதுடன், பல்வேறு திறமைகளைப் பாராட்டி சாதனைப்படைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மெதவச்சியில் அமைந்துள்ள மைத்திரிபால சேனநாயக்க மத்திய கல்லூரியில் கேர்ணல் கட்டளை தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் மற்றும் இப்படைத்தைலைமையகத்தின் அதிகாரியவர்களில் குடும்ப அங்கத்தவர்களும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இராணுவ மகளிர் படைத் தலைமையக வளாகத்தில் மதிய விருந்துபசாரமும் வழங்கப்பட்டதை தொடர்ந்து (18) ஆம் திகதி மாலை இசை நிகழ்வும் இடம் பெற்றது. தமது படையணியின் 20ஆவது நினைவாண்டை முன்னிட்டு (17)ஆம் திகதி அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஜய ஸ்ரீ மஹா போதியில் விஷேட பௌத்த மாத பூஜைகளும் இடம் பெற்றன.

buy footwear | Men’s shoes