Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2019 17:43:42 Hours

வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்கு உதவிகளை வழங்கிய பதுள்ளை மாணவர்கள்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வில்பத்து தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்படுகின்ற துருலிய வெனுவென் அபி எனும் மரநடுகைத் திட்டதிற்கு அமைவாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் சினத் நகரில் மற்றுமோர் பாரிய மரநடுகைத் திட்டமானது கடந்த வியாழக் கிழமை (20) மேற்கொள்ளப்பட்டது.

இம்முறை பதுள்ளை விசாகா கல்லூரியின் சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் வில்பத்துவின் மரநடுகை திட்டத்திற்கு 2000 மரக் கன்றுகளை வழங்கியதுடன் விலந்தைக்குளம் மற்றும் வேப்பள் காடுகளில் இம் மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் பாரிய மரநடுகைத் திட்டமானது 54ஆவது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் 542ஆவது படைப் பிரிவின் கட்;டளை அதிகாரியான கேர்ணல் ரவி ஹேரத் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பதுள்ளை விசாகா கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் படையினர் போன்றோர்க கலந்து கொண்டனர்.Sportswear Design | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ