29th November 2018 22:53:40 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் ஆலோசனைக்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினருக்கு வவுனியா மாவட்டத்தில் குறைந்த வருமானத்தில் வி / இடம்பகஸ்கட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கான பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் பிற பாடசாலை உபகரணங்கள் கொழும்பு ராஜ தங்க நகை மாளிகையினரால் (26) ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
ஆதற்கமைய பாடசாலை ஆசிரியர்களின் உதவியுடன் 56 படைப் பிரிவின் படையினர்களின் முன்முயற்ச்சியால் வவுனியா மாவட்டத்தில் தொலைதூர இடங்களில் வறுமையின் கீழ் வாழும் மாணவர்களை கருத்திற்கொண்டு இந் நன்கொடைகள் வழங்கப்பட்டது.
ஆத்துடன் 563 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேணல் . ஏ. டி. பி. எதிரிசிங்க மற்றும் 563 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் ஜெனரல் ஸ்டாப் பி. ஏ. எம்.பீரிஸ். மற்றும் - வன்னி வி/இடம்பகஸ்கட வித்யாலயத்தின் அதிபர் திரு.எஸ். பிரேமசிரி மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.spy offers | Nike Releases, Launch Links & Raffles