Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2019 13:28:49 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சிவில் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஊக்குவிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் சிவில் ஒருங்கிணைப்பு பணிகள் நிமித்தம் கேர்ணல் ஒருங்கினைப்பு காரியாலயம், சிவில் தொடர்பாடல் அலுவலுகம் மற்றும் ஊடக பிரிவு காரியாலயம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க அவர்களினால் இம் மாதம் (17) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

பல்வேறுபட்ட திட்டங்களை ஒருங்கிணைப்பு பணிகளில் படையினர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கண்காணித்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இந்த புதிய கிளை அலுவலகங்களை நிர்மானிப்பதற்கு தீர்மானித்து பின்னர் 22 ஆவது பொறியியல் சேவைப் படைப் பிரிவிற்கு இந்த புதிய கட்டிடங்களை நிர்மானிப்பதற்கான பணிப்புரைகளை விடுத்தார்.

இதன் பிரகாரம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக விநியோக பிரிதானி கேர்ணல் இந்து சமரகோன் அவர்களது கண்காணிப்பின் கீழ் 22 ஆவது பொறியியல் சேவைப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் டப்ள்யூ சி தேசபிரிய அவர்களது பூரன தலைமையில் இந்த கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டு நிறைவடைந்தது.

இந்த புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தைச் சேர்ந்த பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க, நிர்வாக விநியோக பிரதானி கேர்ணல் இந்து சமரகோன், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.Best Authentic Sneakers | THE SNEAKER BULLETIN