02nd August 2018 15:04:05 Hours
‘ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன்’ அமைப்பின் அனுசரனையில் கல்வி தராதரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள திவ்விய உதயபெந்தவெவ மற்றும் மரதமடுவ பிரதேசங்களில் நிர்மானிக்கப்பட்டன.
இந்த பாலர் பாடசாலைகள் (28) ஆம் திகதி சனிக் கிழமை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, ‘ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டஷன்’ நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரி ஸ்டீபன் என்டர்பீ , திருமதி மொரின் என்டர்பீ, பொது நிர்வாக ஒன்றினைப்பு அபிவிருத்தி அதிகாரி திருமதி சிரோமி மாஷகோரல அவர்களின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டன.
47 சிறார்கள் படிப்பதற்கான பாலர் பாடசாலைகள் 6 அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டன.
இந்த பாலர் பாடசாலை கட்டுமான பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்விற்கு 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா, வவுனியா பிரதேச செயலாளர் எம்.எஸ் ஜானக, ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் எம்.எஸ் திருமதி சம்பா டி விதானபதிரன மற்றும் கிராம வாசிகள் இணைந்து கொண்டனர்.affiliate link trace | Ανδρικά Nike