Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2017 20:10:10 Hours

வடமாகான ஆளுனர் மற்றும் மாவட்ட செயலாளருடான கலந்துரையாடலில் இராணுவத் தளபதி

வடக்கின யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியான தேரர் மெகஹாஜந்துர ஞாணரத்தின அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்வதற்கான விஜயத்தை மேற்கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுடான விசேட கலந்துரையாடலில் வட மகான ஆளுனரான கௌரவமிக்க ரெஜிநோல்ட் குரே மற்றும் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம் போன்றோர் கடந்த வெள்ளிக் கிழமை (22) கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கிடையிலான நல்லிணக்;கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைமுறையில் இருக்கின்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் யாழில் இடம் பெயர்ந்த மக்களுக்களுக்கான மீள்பதிவேற்றம் ,வீட்டுத் திட்டங்கள் ,வைத்தியசாலைகள் ,யாழ் மக்களுக்கான நலன்புரி வசதிகள் மற்றும் முன்னார் எல் ரி ரீ ஈ போராளிகளுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் வடக்கின் பாதுகாப்பு சேவைகள் போன்றன இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இராணுவ பொறியியலாளர்ப் படையினரால் வழங்கப்படுகின்ற தொழில் சார் மற்றும் தொழில் நுட்ப வசதிகள் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய படையினரால் வழங்கப்படுகின்ற பாதுகாப்புச் சேவை போன்றவற்றை பாராட்டத்தக்கது என வட மகான ஆளுனரான கௌரவமிக்க ரெஜிநோல்ட் குரே மற்றும் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம் போன்றோர் தெரிவித்தனர்.

Asics shoes | Yeezy Boost 350 Trainers