07th June 2018 12:34:04 Hours
இலங்கை இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெறும் ரயிபல் துவக்கு போட்டிகள் தியதலாவை 1000 மீற்றர் துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகி ஜீன் 5 ஆம் திகதி நிறைவுற்றது.
இந்த போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் வருகை தந்து வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு பரிசினை வழங்கி வைத்தார்.
இந்த போட்டிகளில் 35 அணியினர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் இராணுவ வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணி முதலாவது இடத்தையும், கஜபா படையணி இரண்டாவது இடத்தையும் இராணுவ சேவைப் படையணி மற்றும் இராணுவ பொலிஸ் படையணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த போட்டியினை பார்வையிடுவதற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.
affiliate tracking url | UOMO, SCARPE