10th August 2018 22:15:26 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய இராணுவ கால்நடை மிருக மருத்துவ பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கெலும் வடுகொடபிடிய மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களினால் இராணுவ விஷேட படையணியில் இருந்து ஓய்வு பெற்ற படை வீரனுக்கு வீட்டு நிதி உதவிக்காக காசோலைகள் நன்கொடையாக (13) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டன.
இந்த படை வீரன் கொடிய எல்.டி.டி.ஈ பயங்கரவாத யுத்தத்தின் போது பாரிய காயங்களுக்கு உள்ளாகி அங்கவீனமுற்ற நிலையில் தற்பொழுது உள்ளார். இவர் வசிக்கும் வீடானது முழுமையடையாத நிலையில் உள்ள நிலையில் இவரது வீட்டு தேவையை முழுமையாக்கும் நோக்கத்துடன் இராணுவத்தினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு 581 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சந்தன ரணவீர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். buy shoes | Air Jordan Release Dates 2020