Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2017 13:50:19 Hours

யாழ் மக்களின் உணவு திருவிழா

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் மாவட்ட சுற்றுலா துறை ஒன்றியத்தினருடன் இணைந்து யாழ் உணவு திருவிழாவை டிசம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தினர்.

இந்த நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிக்காட்டுதலின் கீழ் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாடுடன் ஒழுங்குகள் செய்யப்பட்டன.

இந்த உணவு திருவிழாவில் இலங்கையில் அனைத்து பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் தரப்பினர் கலந்து கொண்டு வித விதமான சுவையான உணவு வகைகளை முன் வைத்திருந்தனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களும் அதிதியாக இணைந்து கொண்டார்.

இந் நிகழ்வானது (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கூட்டம் இணைந்து இந்த சுவையான உணவு வகைகளை சுவைத்து இன்பமுற்றனர்.

மேலும் இந்த நிகழ்வில் அக்கினி இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.இதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள ஆயர் இல்லம் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களின் ஒத்துழைப்புடன் (17) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இராணுவத்தினரின் பங்கேற்புடன் கிறிஸ்மஸ் கெரோல் கீத நிகழ்வுகளும் நடைப்பெற்றன.

இந்த நிகழ்விற்கு வடக்கு ஆளுனர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, அரசாங்க உயர் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்திருந்தனர்

latest jordans | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ