Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2019 14:00:35 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23ஆவது ஆண்டு விழா

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23ஆவது ஆண்டு விழாவானது ஜூன் மாதம் 16முதல் 20ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டது. இதன் போது போதி பூஜை நிகழ்வுகள் (16) இடம் பெற்றதோடு சொளமன் நினைவுத் தூபியில் உயிர் நீத்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் (17) காலை முதல் இரவு நேர பிரித் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் படையினரின் அணிவகுப்பு மரியாதையின் மூலம் வரவேற்கப்பட்டதோடு தளபதியவர்கள் மரநடுகையையும் மேற்கொண்டதுடன் அன்றய தினமே பலாலி வைத்தியசாலையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து படையினர்களுக்குமான மதிய விருந்துபசாரத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் கலந்த கொண்டார்

மேலும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிரமதானப் பணிகள் மற்றும் இரத்ததான நிகழ்வுகள் போன்றன பலாலி வைத்தியசாலையில் இடம் பெற்றன. இதற்கான ஒத்துழைப்பை யாழ் போதான வைத்தியசாலை வழங்கியதுடன் கடந்த வியாழக் கிழமை (20) இன்னிசை நிகழ்வோடு இந் நிகழ்வுகள் நிறைவடைந்தன.Asics footwear | Air Jordan