Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th December 2018 10:18:46 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒத்துழைப்புடன் பலாலியில் பலாதோட்டம்

பலாலி இராணுவ முகாம் வளாகத்தில் சுமார் 10 ஏக்கர் நில பரப்பளவில் 500 பலா கன்றுகள் நடுவதற்காக (Jackfruit Park) எனும் பெயரில் பலா தோட்டம் அமைப்பதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் லயன் கிளப் 306 பி2 மற்றும் Hadabima அதிகாரசபையுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் யாழ் குடா நாட்டில் பிரத்தியேகமாக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந் நிலத்தில் மரக் கன்றுகளை பெற்றுக் கொள்வதற்காக கடந்த (03) ஆம் திகதி திங்கட் கிழமை அன்று யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் சார்பில் இப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் மேலாண்மை அதிகாரியான பிரிகேடியர் அஜித் எல்விடி மற்றும் லயன் கிளப் 306 பி2 இன் வைத்தியர் எம்.ராமஜயம் அவர்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் இந் நிகழ்வில் லயன் கிளப்பின் தலைவர் திருமதி (Mrs. Gudrun Yngvadottir) கலந்து கொண்டார். Sportswear free shipping | Sneakers Nike