Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2019 23:55:00 Hours

யாழ் படையினர்களால் காங்கேசன்துறை புகையிர நிலையத்திற்கு உதவிகள்

குடா நாட்டின் கடைசி நிறுத்த புகையிரத நிலையமான காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அத்துடன் பொதுமக்களும் மேலதிகமாக இந்த புகையிரத நிலையத்திற்கு வருகை தருகின்றனர். இதனை கவனத்திற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் கொண்டு வந்து தல்செவன இராணுவ சுற்றுலா விடுதியின் அனுசரனையில் புகையிரத நிலையத்திற்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த புகையிரத நிலையத்திற்கு 12 நாற்காலிகள், டிரஸ்ஷிங் மேசை, சுவர் கண்ணாடி, தண்ணீர் கூலர்கள், 3 மின்விசிறிகள், கைகழுவும் பீங்கான்கள், டிஜிட்டல் கடிகாரம், இலவச வைபை வசதிகள், தொலைபேசி பெட்டரி சார்ஜிங் வசதிகள், யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கியமான சுவாரஸ்யமான இடங்களை சித்தரிக்கும் பல சுவர் படங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தல்செவன இராணுவ சுற்றுலா விடுதி அதிகாரிகளது அனுசரனையில் முழுமையாக வண்ண சலவை செய்யப்பட்டும், சுகாதார வசதிகள் மற்றும் ஓய்வு அறைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் புகையிரத நிலையத்தின் பயணிகளின் பயன்பாட்டிற்காக 50 "எல்.ஈ.டி தொலைக்காட்சியும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் புகையிரத நிலைய அதிபர் அவர்களுக்கு கையளிக்கப்பட்டன. இந்த தொலைக்காட்சி நன்கொடையாளரான திரு அஜித் பலிஹக்கார அவர்களின் அனுசரனையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், தல்செவன இராணுவ சுற்றுலா விடுதியின் நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் புகையிரத நிலைய அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Buy Kicks | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp