Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2018 22:37:38 Hours

முல்லைத்தீவுப் படையினருக்கு வனவிலங்கு மற்றும் பல்வகை உயிரினம் தொடர்பான கருத்தரங்கு

முல்லைத்தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் வவுணியா வனவிலங்கு காரியாலயம் இணைந்து நடாத்திய வனவிலங்கு மற்றும் பல்வகை உயிரின சட்டம் தொடர்பான கருத்தரங்கனாது முல்லைத் தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை(28) இடம் பெற்றது.

அந்த வகையில் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலில் இப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 135ற்கும் மேற்பட்ட படையினரை உள்ளடக்கி வனவிலங்கு மற்றும் பல்வகை உயிரினம் தொடர்பிலான கருத்தரங்கு இடம் பெற்றது.

மேலும் இதன் போதான விரிவுரைகள் வவுணியா வனவிலங்கு காரியாலய பணிப்பாளரான திரு வி;க்கிரமசிங்க ஏ சரத் போன்றோரின் தலைமையில் இடம் பெற்றது. affiliate link trace | Nike Shoes, Clothing & Accessories