Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2018 13:57:24 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 9 ஆவது ஆண்டு விழா

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 9 ஆவது ஆண்டு பூர்த்தி விழா முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பங்களிப்புடன் ஜீன் மாதம் 4 , 5 ஆம் திகதிகளில் படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் முதல் நாளன்று சமய மத தலைவர்களது ஆசிர்வாத த்துடன் சமய நிகழ்வுகளும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் உள்ள இராணுவ நினைவு தூபியில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவு கூறும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இரண்டாவது தினமான 5 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியை வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வும் படைத் தளபதியினால் இடம்பெற்றன. அதன் பின்பு படைத் தளபதியின் இணைப்புடன் இராணுவ அங்கத்தவர்கள் அனைவரும் குழுப் புகைப்படத்தில் இணைந்திருந்தினர்.

பின்பு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பகல் விருந்தோம்பல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் படைத் தளபதிகள் , முன்னரங்க கட்டளை தளபதி, படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Authentic Sneakers | NIKE HOMME