Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2018 16:08:14 Hours

முல்லைத்தீவு படையினர் கிழக்கு படையினருடன் இணைந்து அடிப்படை பாதுகாப்பு பயிற்ச்சிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 29 படையினர்களும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 படையினர்களும் இணைந்து ரியாலிட்டி அடிப்படை பாதுகாப்பு பயிற்ச்சி நெறியை புனானியில் அமைந்துள்ள 23 அவது படைப் பிரிவில் மேற் கொண்டனர்.

இப் பயிற்ச்சி நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வெல அவர்களும் கலந்து கொண்டனர்.

இப் பாதுகாப்பு பயிற்ச்சியானது தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் படையினர்களின் எதிர்கால தற்பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்பாடுசெய்யப்பட்டதாகும்.

இப் பயிற்ச்சி (பாயிற்ச்சி இல 05) நிறைவின் வெளியேறும் நிகழ்வானது கடந்த (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இடம் பொற்றது. இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்கள் கலந்து கொண்டார்.

இப் பயிற்ச்சியில் நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை பற்றிய எதிர்காலத்தில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு தகுதியுள்ள பயிற்ச்சிகள் தொடர்பாக 1 ஆவது கொமாண்டோ படையணியின் லெப்டினென்ட் கேர்ணல் கே.வி.ஐ.எல் ஜயவீர அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டது.

இப் பயிற்ச்சி நிகழ்விற்கு காலாட்படை ஜெனரல் பணியகத்தின் ஜெனரல் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பட்டிவலான, 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கிழக்கு முன் பராமரிப்பு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக மற்றும் 24 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே உட்பட 23 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் சூல அபநாயக மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் படையினர்களும் கலந்து கொண்டனர. bridge media | Nike Off-White