12th November 2018 16:34:34 Hours
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளரான திரு ஹேமசிறி பெணான்டோ அவர்களை பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் கடந்த திங்கட் கிழமை (12) சந்தித்தார்.
இவ் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளரான திரு பெணான்டோ அவர்களை சந்தித்து இராணுவத்தின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் அத்துடன் வட கிழக்கில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைப் பற்றியும் விபரித்தார்.
அந்த வகையில் திரு பொணான்டோ அவர்கள் இராணுவத்துடனான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலின் இறுதியில் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் திரு பெணான்டோ அவர்களுக்கு நினைவூச் சின்னதையும் வழக்கி வைத்தார். Authentic Nike Sneakers | Nike Off-White